பல திருப்பங்களை கொண்ட ரொமான்டிக் நாவல் மீட்டாத வீணையடி & விண்மீன் விழியில் நுழைந்தேன் நாவல்களில் வரும் வாரிசுகளுக்கான கதை
அவன் வண்டியை நிறுத்திய கணம், அவன் வண்டியின் பின் புறம் "டங்" என்று ஒரு பெரிய சத்தம்... வண்டி ஒரு கணம் முன்னே போய் பின்னே வர, அவன் மேனியும் அதிர்ந்தது... ஆத்திரம் வந்து விட்டது அவனுக்கு... ஏதோ ஒன்று வண்டியில் மோதி இருக்கின்றது என்று தெரிய, கோபத்துடன் வண்டியில் இருந்து கீழே இறங்கியவன் கண்ணில் பட்டது என்னவோ கருப்பு நிற ரேங்க்லர் வகை ஜீப் தான்... உள்ளே யார் என்று தெரியவில்லை... ஜீப்பை முறைத்துக் கொண்டே, வேகமாக ஷேர்ட்டின் கையை ,மடித்து விட்டபடி வந்தவன், எட்டி தனது காரின் பின் பக்கம் பார்த்தான்... மோதிய வேகத்தில், காரின் பின் பக்கம் மொத்தமாக நெளிந்து விட்டது... கண்ணாடி வேறு உடைந்து இருந்தது... ரேங்க்லர் ஜீப் உறுதியானது என்பதால், காரை நசுக்கி விட்டு இருந்தது... எவ்வளவு ஆசையாக வாங்கிய கார் அது... புத்தம் புது கார் வேறு... உயிராக மதிக்கின்றான்... நிறுத்தி வைத்து இருந்த காரின் பின்னால் மோதினால் யாருக்கு தான் கோபம் வராது? வெறியாகி விட்டது... சாதாரணமாகவே அவனுக்கு கோபம் வந்தால் உச்சம் தலை முடி நெட்டிக் கொண்டு நிற்கும்... இப்போது கேட்கவும் வேண்டுமா? "ஏய் இறங்கு" என்று அதட்டிக் கொண்டே, ஜீப்பின் கதவை வேகமாக திறந்தான்... அங்கே அவனை விழி விரித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள் இருபது வயதை நெருங்கிக் கொண்டு இருந்த பெண்... மாநிறமாக இருந்தாள்... பேசும் விழிகள்... சுடிதார் தான் அணிந்து இருந்தாள்.