AUDIOBOOK

About

கதாநாயகனின் பார்வையில் நகர்கின்றது இந்த கதை. ஏதோ காரணத்திற்க்காக ஊரை விட்டு ஓடி வர நேர்ந்த கதாநாயகன் ஒரு செல்வந்தனிடம் வேலைக்கு சேர, நாளைடைவில் அவரது மகளான சாவித்ரியை மணக்கிறார். அவர் காலத்தின் பிறகு சொத்துக்களை பார்த்துக்கொள்கிறார். இருந்தும் மனதில் அமைதி இல்லை. நாளடைவில் அவர் மனைவியோடு சொந்த ஊரான கரடிமலைக்கு திரும்புகிறார். அவருடன் நம்மளையும் அந்த இடத்துக்கு கூட்டி செல்கிறார். தான் காதலித்த பெண்ணை தேடி செல்கிறவர் அங்கு அதே வடிவில் இருக்கும் அவளின் மகளான அபிதாவை பார்க்க நேர்கிறார். அவருடைய கடந்த காலத்தின் சில ஏடுகள் மற்றும் நிகழ்கால எண்ணங்களோடு நாமும் இணைத்து பிரயாணம் செய்வது தான் இந்த அபிதா.

Related Subjects

Artists