EBOOK

Burma Ramani

Azha. Valliappa
(0)

About

'பர்மா ரமணி' என்னும் இக்கதை 'கல்கி' பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தது. வாரா வாரம் தொடராக வெளிவந்த இக்கதையைப் பல சிறுவர் சிறுமியர் தனியாக எடுத்து, புத்தகம் போல் சேர்த்து வைத்திருக்கி றார்கள். ஆயினும், எல்லாக் குழந்தைகளும் எந்தக் காலத்திலும் படித்து இன்புற இதைப் புத்தகமாக வெளியிடுவது தான் சிறந்த வழி. இதை உணர்ந்தே இப்புத்தகத்தை வெளியிடுகிறோம்.

'பர்மா ரமணி'யில் அன்பின் பெருமையை மிகவும் அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். ரமணி என்னும் அனாதைச் சிறுவன், தனக்கு ஆதரவளித்தவர்கள் ளிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறான்! அவனிடம் நாடக சபா மானேஜர் மதுரநாயகமும், பர்மாப் பணக்காரர் சிற்சபேசன், அவர் மனைவி காமாட்சி அம்மாள், மகள் மாலதி முதலியோரும் எவ்வளவு தூரம் அன்பு வைத்திருக் கிறார்கள் ! இரண்டே நாட்கள் தான் ரமணியுடன் பழகிய சுந்தரம் கூடத் தனது அன்பை எப்படிக் காட்டுகிறான்!

அன்பை அடிப்படையாக வைத்து எழுதப்பெற்ற இந்த நெடுங்கதையில் பல அற்புத, ஆச்சரிய சம்பவங்களைப் புகுத்திக் கதைக்கு விறுவிறுப்புக் கொடுத்துள்ளார், ஆசிரி யர். யாவும் சிறுவர் சிறுமியர் உள்ளத்தைக் கவரக்கூடிய சம்பவங்களே.

Related Subjects

Artists