EBOOK

About
அக்கினிக் குஞ்சு
பாரதி விழாவில் தலைவர் கலைஞர்
சென்னை கிண்டியிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றம் மற்றும் மாணவர் தமிழ்ப் பேரவை சார்பில், 29-10-1985 அன்று நடைபெற்ற பாரதி விழாவில், தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பேருரையை இந்நூல் வடிவில் தலைமைக் கழகம் பெருமையோடு வெளியிடுகிறது.
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றமும் மாணவர் தமிழ்ப்பேரவையும் இணைந்து நடத்துகின்ற பாரதி விழாவில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பினைப் பெற்றமைக்காக, இந்த வாய்ப்பினை வழங்கிய இரு மன்றத்தினுடைய நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த விழாவிலே கலந்துகொள்ள வேண்டுமென்று நண்பர்கள் என்னை அணுகிய போது, பாரதி விழாவில் "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்"என்ற தலைப்பில் நீங்கள் பேசவேண்டும் என்று கேட்டார்கள்.
நான் அவர்களிடத்திலே, பாரதி அந்தக் காலத்திலே "சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடிய உட்கருத்து வேறு. இன்றைக்கு - "சிங்களத்தீவினுக்கே படை அனுப்புவோம்"என்று சொல்லவேண்டிய காலகட்டத்தில் - பாலம் அமைப்போம் என்ற பாட்டுக்கு பொருள் கூறுவதிலே பயனில்லை என்று குறிப்பிட்டேன்.
பாரதி விழாவில் தலைவர் கலைஞர்
சென்னை கிண்டியிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றம் மற்றும் மாணவர் தமிழ்ப் பேரவை சார்பில், 29-10-1985 அன்று நடைபெற்ற பாரதி விழாவில், தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பேருரையை இந்நூல் வடிவில் தலைமைக் கழகம் பெருமையோடு வெளியிடுகிறது.
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றமும் மாணவர் தமிழ்ப்பேரவையும் இணைந்து நடத்துகின்ற பாரதி விழாவில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பினைப் பெற்றமைக்காக, இந்த வாய்ப்பினை வழங்கிய இரு மன்றத்தினுடைய நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த விழாவிலே கலந்துகொள்ள வேண்டுமென்று நண்பர்கள் என்னை அணுகிய போது, பாரதி விழாவில் "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்"என்ற தலைப்பில் நீங்கள் பேசவேண்டும் என்று கேட்டார்கள்.
நான் அவர்களிடத்திலே, பாரதி அந்தக் காலத்திலே "சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடிய உட்கருத்து வேறு. இன்றைக்கு - "சிங்களத்தீவினுக்கே படை அனுப்புவோம்"என்று சொல்லவேண்டிய காலகட்டத்தில் - பாலம் அமைப்போம் என்ற பாட்டுக்கு பொருள் கூறுவதிலே பயனில்லை என்று குறிப்பிட்டேன்.