About
இதன் கதாநாயகி ரங்க நாயகி. ஏழைக்குடும்பத்து பெண்மணி. ஏழை புரோகிதர் கைலாசத்துக்கு வாழ்க்கை படுகிறாள். கணவனுக்கு ஒரு தாயும், இரண்டு தம்பிகளும், மூன்று தங்கைகளும். அவர்களை வாழ வைக்க ரங்கநாயகி குழந்தை பெறவில்லை. இவர்களை தன் குழந்தைகளாக பாவித்து வளர்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் மரிக்க, இவர்களை ஆளாக்க வக்கீலாகி, பெரிய கம்பெனியில் லீகல் அட்வைசராகி, பல எதிர்ப்புகளை தாண்டி அவர்களை ஆளாக்கி, இறுதியில் மனநிலை பாதித்து கணவனிடம் போய் சேருகிறாள். உருக்கமான குடும்ப கதை.
